கார்த்திகை விளக்கீடு என்பது என்ன.

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.

இத் திருநாள் இந்த வருடம் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.
கார்திகை மாதம் முழுவதும் வீடுகளில் தீபம் ஏற்றுவது சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை, ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும். அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகை தீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலை வாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் என குறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில் உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீப ஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

முறைப்படி விரதமிருந்து தீபமேற்றி வழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளி பிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன் கடைப்பிடியுங்கள் ஒளிமயமான எதிரகாலம் நிட்சயம்...!!!
    -- அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக.

நன்றி : வதிரி தோட்டத்து விநாயகர் ஆலயம்  

Post a Comment

Previous Post Next Post